வாழ்க்கையின் நோக்கம்
செல்வந்தராவது தான் ஒருவருடைய நோக்கமாக இருக்குமேயானால், அந்த செல்வத்தையடைந்த பின்னர், மேற்கொண்டு யாதொரு அந்தஸ்தையும் அடைந்து சாதிக்க அங்கே ஒன்றுமே இருக்காது என்பதை நினைவு கூர்ந்து கவனியுங்கள்.
நமது உடற்கூற்றூக்கள் அனைத்திற்கும் அதனதன் நோக்கம் இருப்பதைப்போலவே தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது என்பது ஒரு வெட்டவெளிச்சமான உண்மை. ஒரு நோகமின்றி நாம் அலையவோ அல்லது வெறும் நமது அன்றாட இயல்புணர்வுகளையும் ஆசைகளையும் பூர்த்திசெய்துகொள்ளவோ மகிமை வாய்ந்த, ஞானமுள்ள இறைவன் நம்மை இவ்வுலகில் படைத்தருளவில்லை. ஆனால், நாம் அனைவருக்கும் அந்த ஒரே ஒரு இறைவனான ‘அல்லாஹ்’வையே வழிபடும் ஒரு நோக்கமுள்ளது, ஏனெனில் நேர்வழியானது தனிப்பட்ட நன்நெறிகள் உள்ளடங்கி, சமுதாயத்திற்கு பயனளிக்கும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம்மை அமைதியான சூழ்நிலையில் வாழ வழிநடத்தும்.
எல்லாம் வல்லவனுக்கு நெருக்கமாக இட்டுச் செல்லும் நன்நெறிகள் :
ஒவ்வொரு நாளும் ஐவேளை வழிபடுவது (தொழுதல்)
நேர் வழியில் சம்பாதிப்பது
ஒடுக்கு முறையை எதிர்ப்பது
அனாதைகளை பரிபாலிப்பது
சமுதாயத்திற்கு நன்மை பயப்பது
சமுதாயத்திற்கு உதவுவது
பெற்றோருக்கு அடிபணிவது
பொறுமையுடனும் பணிவுடனும் இருப்பது
அநீதிக்கு எதிராக எழுவது
குடும்பத்தை பரிபாலிப்பது
சத்தியத்தைப் பேசி நியாயத்தை நிலை நாட்டுவது
இறையச்சம் ஊட்டுவது
அனைத்தின் ஞானமும் கொண்ட அல்லாஹ் இவ்வாழ்க்கையை ஒரு பரிட்சையாக வர்ணித்து அவனால் இந்த மனித குலம் பல விதங்களில் சோதனைக்குட் படுத்தப்படுகிறது. ஒரு நிகழ்சியை கட்டுப்படுத்தும் திறமை நமது கையில் இல்லை எனினும், அதன் அணுகு முறையை கையாளும் வழிவகை நம்மிடம் உண்டு.
கடினமான நேரங்களில் பொறுமை சாதித்து நமக்கு அளிக்கப்பட்ட அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்துவதே நாம் நித்திய சொர்க்கத்தை அடைய இயலும் வழிமுறைகளாகும். ஒரு முன்னெச்சரிக்கையாக, அல்லாஹ்வுடைய கட்டளைகளின் நிராகரிப்பு மற்றும் அவன் மீது நம்பிக்கையற்ற போக்கிற்கான நரக தண்டனையைப் பற்றி முன் கூட்டியே நாம் எச்சரிக்கப்பட்டுள்ளோம்.
ஒருவர் தன்னுடைய ஞானம் மற்றும் அறிவாற்றலால் சிறந்த முறையில் சிந்தித்து, அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை கவனித்து அவைகளை அடையாளம் கண்டு அல்லாஹ்வின் வழி காட்டலில் தனது வாழ்க்கையை கழிப்பதில் தான் பெரும்பாலாலான இறை நம்பிக்கையுள்ளது. இது தான் வாழ்க்கையின் யதார்த்தமான நோக்கமாகும். மேலும் அதை சாதிப்பவர் தான் முஸ்லிம் என்பவர் ஆவார்.
குர்’ஆன்
மனித குலத்திற்கு வழிகாட்டும் கையேடு குர்’ஆன் என்ற வேத நூலைத் தவிர வேறொன்றும் இல்லை. மனிதனாகிய நமக்கு என்ன தேவை என்பதை நம்மை படைத்த இறைவன் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். ஆகவே நன்மை தீமைகளை நமக்கு கற்பிக்க அவனே மனித உருவில் உலகில் பிரவேசிக்கும் அவசியமில்லை.
குர்’ஆனுக்கு முந்தி இதே போன்ற புனித வேத நூல்கள் அக்கால மக்களுக்காக வெளிப்படுத்தப்பட்டன. இருப்பினும் குர்’ஆனை நீதிநாள் வரை பாதுகாக்கும் பொறுப்பு அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்
பட்டிருக்கிறது.
வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளிலும் மனித குலம் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எது என்று குர்’ஆன் வழி காட்டுகிறது.
வழிபாட்டின் நோக்கம்
முஸ்லிம்களின் வழிபாட்டு முறை உலகின் மற்ற மதங்களுடன் இணையற்றதாகும். வழிபாட்டின் குறிக்கோள் சர்வவல்லமை படைத்த அல்லாஹ்வினால் புனித குர்’ஆனில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாவது:
“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே
நீங்கள் வணங்குங்கள்;…. என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை
அனுப்பி வைத்தோம்;….” (அல் குர்’ஆன் – 16:36)
இஸ்லாம் உடைய வழிபாட்டில் ஒரு தனித்துவமான பங்காற்றல் உள்ளது. அது ஒரு நபரை தனது வாழ்க்கையை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராக குறிக்கிறது.
பிந்திய வாழ்க்கயின் மீது நம்பிக்கை
நாம் இறந்துவிட்ட பின்னரும் நமது உயிர் ஒரு ஆவியின் உருவில் நித்தியமானது, மற்றும் உடல் சார்பாக உயிர்ப்பித்து எழக்கூடியது. நற்காரியங்களை புரிந்தோர் அல்லாஹ்வினால் வரவேற்கப்படுவர், எதிராக மற்றவர் அவர்களுடைய தீய செயல்களுக்காக தண்டிக்கப்படுவர்.